(22-09-10 தேதியிட்ட விகடன்;
அட்டைப்படத்தில் சோ, விக்ரம், சசிக்குமார் மற்றும் ஒருநடிகை; எனக்கு பெயர் தெரியவில்லை. மன்னிக்கவும் )
நீங்கள் ஆனந்த விகடன் வாங்கிய உடன் முதன் முதலில் படிப்பது எதுவாக இருக்கும்?
என் சாய்ஸ் நானே கேள்வி.. நானே பதில்.. இந்த வாரம்
பெரும்பாலானவைகள்முதல்வர்கருணாநிதியை வாருவதாகவே
இருந்தது.
சினிமா விமர்சனத்தில் இப்பொழுதெல்லாம் மார்க்குகளை வாரி வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.(விலைவாசி உயர்வின் பாதிப்போ).
எந்திரன் ரீலீஸை முன்னிட்டு தமிழக அரசு பொதுவிடுமுறை என வலை பாயுதே-வில் kanapraba@twitter.com கலாய்த்திருந்தது
ரசிக்க வைத்தது.
விக்ரம் பேட்டியில் எப்பொழுதும் மனசைத்தொடும் வார்த்தைகள் இருக்கும். இந்த முறை அது மிஸ்ஸிங். " நல்லா நடிச்சிருக்கே!னு தோளில் தட்டிக்கொடுங்க. அது இன்னொரு நடிகரைக் காயப்படுத்தி வரும்னா...எனக்கு வேண்டாம். படம் பார்த்திட்டு 'உன்னைப் பார்க்க மதம் பிடித்த யானை மாதிரி இருக்கு'ன்னு பாலா சொன்னார். மனசிலிருந்து வந்த வார்த்தைகள்.. விக்ரம் எப்பவும் டைரக்டர் சாய்ஸ் நடிகன்.
மனம் கொத்திப் பறவை-யில் சாரு நிவேதிதா ஃபேன்மன் பற்றி சுவாரசியமாக விவரித்திருந்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இதுவரை தேசிய விருதோ,தமிழ்நாடு அரசு விருதோ கிடைக்கவில்லை என்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியான விஷயம் தான்.
"காவி உடையைப் பயங்கரவாதத்தோடு ஒப்பிட்டு ப.சிதம்பரம் பேசியது நியாயமா?" என்ற கேள்விக்கு பயின்ட்களை அடுக்கி மதன் பதிலளித்திருந்தது சூப்பர். (வக்கீல்கள் கவனிக்கவும்)
"முழுவதும்
நிரம்பியக் கோப்பையை
மேலும் நிரப்ப இயலாது"
என்ற ஜென் கவிதையை வைத்து இந்த வார "நீயும் நானும்"-ஐ நகர்த்தியிருக்கிறார் கோபிநாத்.(அந்த கவிதையைக் குறிப்பிடாமலேயே). "தேவை இல்லாதவற்றை விரட்டுங்கள்... உங்களுக்கு தேவைப்படுவது தானாக வரும்.." என்ற தமிழருவிமணியனின் வரிகளை அழகாக பயன் படுத்தியிருக்கிறார்கோபி நாத். 'எல்லா பாறைகளுக்குள்ளும் ஒரு சிலை இருக்கிறது" என அழகாக முடித்ததும் அருமை.
தங்கர் பச்சானின் சிறுகதை வார்த்தைகளின் பிரயோகத்தால் மனசுக்குள்ஊடுருவுகிறது. கதையில் தெறிக்கும் உண்மைகள் மனசை வலிக்க வைத்தாலும் நம்மால் என்ன செய்யமுடியும் பச்சான்.(ராசதுரை போலவே இயலாமை மேலிடுகிறது நமக்கும்).
சொல்வனத்தில் பெயரெனப்படுவது யாதெனில்...கவிதை
படித்ததும் பிடித்தது. எங்கே இருக்கிறது குதிரைக் குட்டி கவனிக்க வைத்தது. இறுதியாய் வருகிறார் வாலி என எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறார்கள்.
அவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த வார விகடனுக்காக..