13 September 2010

"ஊர் சுத்தி".

அனைவருக்கும் வணக்கம். நான் "ஊர் சுத்தி". இந்த "தீதும் நன்றும்" வலைப்பூ வாயிலாக தற்போது உலகை சுத்த கிளம்பி இருக்கிறேன்.



அரசுப்பள்ளியின் ஆசிரியர் என்பது தான் என் அடையாளம். எங்கள் பள்ளிக்கு சென்ற வாரம் ஆண்டாய்வுச் செய்ய முதன்மைக்கல்வி அதிகாரி வந்திருந்தார். திடீர் ஆய்வு என்பதற்கும் ஆண்டாய்வு என்பதற்கும் என்ன வேறுபாடு என்றால், திடீர் ஆய்வுவில் அதிகாரி சிறிது நேரம் இருப்பார். ஆய்வின் முடிவில் ஜீப் டீசல் என்ற வகையில் ஐநூறு செலவழியும். ஆண்டாய்வில் எல்லாம் கொஞ்சம் அதிகரிக்கும். இந்த முறை ஆய்வின் போது உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை "மாஸ் டிரில்" செய்ய வைத்தார். அதில் அதிகாரிக்கு திருப்தி இல்லை. "நான் ஆண்டாய்வுக்கு வருகிறேன் என்பதை இரண்டு மாதத்திற்கு முன்பே தெரியப்படுத்திவிட்டேன், இருந்தும் இவ்வளவு தானா பயிற்சி கொடுக்க முடிந்தது?" என அதிகாரி உடற்கல்வி ஆசிரியரை சாடினார். அடுத்த மாதம் வருவேன், அப்போதாவது நன்றாக செய்ய வேண்டும்" என்பது இறுதிக்கெடு.



அறிவிப்பு கொடுத்து விட்டு வரும் அதிகாரிகளும், அசைந்துக்கொடுக்காத ஆசிரியர்களும் எப்படி அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்தப்போகிறார்கள். தரம் உயர்த்துவதற்காகச் செய்யப்பட்டு வந்த ஆண்டாய்வு வெறுமனே சடங்காக மாறி விட்ட இன்றையச் சூழலில், ஆண்டாய்வு என்பதற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை இந்த ஊர் சுத்திக்கு....